×

பெரியபாளையம் அருகே புதர்மண்டி கிடக்கும் பஸ் நிழற்குடை: விஷப்பூச்சிகள் உலா: பயணிகள் அச்சம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே புதர்மண்டி கிடக்கும் பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.வடமதுரை ஊராட்சி மற்றும் பனப்பாக்கம் ஊராட்சி இடையில் எம்.டி.சி.நகர் பகுதியில் உள்ள பேருந்து பயணிகள் நிழற்குடையை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்துள்ளது. எனவே இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் - சென்னை இடையே உள்ள வடமதுரை ஊராட்சி, பனப்பாக்கம் ஊராட்சி இடையில் உள்ள எம்.டி.சி.நகர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை அப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அங்கு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நிழற்குடை அமைத்து தரப்பட்டது.

இந்நிலையில், இந்த பேருந்து நிழற்குடையை சுற்றி தற்போது அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் நிழற்குடையில் சில விஷப்பூச்சிகள் உலாவுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் இந்த பேருந்து நிழற்குடையில் நின்று செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் பயணிகள் சாலை ஓரத்திலே நின்று பேருந்தில் ஏறி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முட்புதர்களை அகற்றிவிட்டு பேருந்து நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Putharmandi ,Periyapalayam , Bus umbrella at Putharmandi near Periyapalayam: Poisonous stroll: Passengers fear
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...