×

பேஸ்புக் மூலம் நட்பாக பழகி நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

சென்னை: பேஸ்புக் மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி நட்சத்திர ஓட்டலில் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக காதலன் மீது இளம் பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் எம்.ஏ கம்யூனிகேஷன் படித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஊழியாக பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றேன். தற்போது வில்லிவாக்கம் பகுதியில் தனியாக வசித்து வருகிறேன். எனது பெற்றோர் மும்பையில் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு பேஸ்புக் மூலம் விக்ரம் வேதகிரி என்பவர் அறிமுகமானார். அவர் சொந்தமாக மருந்து கம்பெனி வைத்திருப்பதாகவும், அவரது அப்பா வேதகிரி என்றும், தான் சென்னை திருநின்றவூரில் சொந்த வீட்டில் வசித்து வருவதாகவும் கூறினார்.

பிறகு நாங்கள் நேரில் சந்தித்தோம். விக்ரம் அவரது மாமா வீட்டிற்கு அழைத்து சென்று என்னை அறிமுகப்படுத்தினார். பின்னர் கடந்த 2021ம் தேதி காதலர் தினத்தன்று பேஸ்புக் லைவ் மூலம் விக்ரம் தனது காதலை என்னிடம் கூறினார். ஆனால் அவரது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு என்னை தொடர்ந்து கெஞ்சி காதலிக்க வைத்தார். 2021 பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் என்னை ஐதராபாத்திற்கு டூர் அழைத்து சென்றார். அங்கு ஒரு சர்வீஸ் அப்பார்ட்மென்ட்டில் தனியாக அவருடன் தங்க வைத்தார். பிறகு ெசன்டிமென்டாக பேசி ஏமாற்றி எனக்கு தாலி கட்டி ரகசிய திருமணம் செய்து கொண்டதாக என்னை நம்பவைத்து என்னுடன் பல முறை உடலுறவு வைத்துக்கொண்டார். நான் விவாகரத்து ஆனவர் என்ற விபரம் விக்ரம் ெபற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அவரது வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் அவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

அதன் பிறகு அவருக்கு தேவையான பண உதவிகளை நான் செய்து வந்தேன். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து கடந்த 2021 செப்டம்பர் மாதம் 9ம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் என் தாயார், நண்பர்கள் மற்றும் விக்ரம் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.  ஆனால் அதன் பின் அவரது நடவடிக்கைகள் மோசமாக மாறியது. நான் எனது வில்லிவாக்கம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் விக்ரம் என்னிடம் அடிக்கடி செக்ஸ் பற்றி பேசியும், செக்ஸ் வீடியோக்களை பார்க்க வைத்து அதை போலவே செயல்பட வேண்டும் என்று கூறி செக்ஸ் டார்ச்சர் செய்து என்னிடம் உடலுறவு கொண்டார். அப்போது அவர் சொல்வது போல் உடை அணியவைத்து தொந்தரவு செய்தார். அதோடு இல்லாமல் ஓட்டலில் தங்கி ஆபாச உடை அணிந்து அவர் விருப்பப்படி ஆபாச வீடியோவில் ஜோடியாக நடிக்க வாட்ஸ் அப் மூலம் அணுகினார்.

மேலும், விக்ரம் கடந்த 5.3.2022ம் தேதி என் வீடு தேடி வந்து ரூ.10 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், இல்லை என்றால் நானும், அவரும் உடலுறவு வைத்து கொண்ட வீடியோவையும், எனது புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன். இனி என் வாழ்க்கையில் தலையிட கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றார். இதுகுறித்து நான் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கிடையே வரும் 17ம் தேதி தி.நகரில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தது. எனவே என்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து உல்லாசமாக இருந்து அந்த வீடியோவை வைத்து ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டி வரும் விக்ரம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Intimidated by asking for Rs 10 lakh by showing a video of him having fun at a star hotel by getting friendly through Facebook
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...