×

நாளை முதல் வருடாந்திர பராமரிப்பு பணி; பழநியில் ரோப்கார் சேவை 45 நாட்களுக்கு நிறுத்தம்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.  பக்தர்கள் வசதிக்காக மேற்கு கிரி வீதியில் வின்ச், தெற்கு கிரி வீதியில் ரோப்கார் இயக்கப்படுகிறது.  இந்த ரோப்காரில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

பெட்டிகள் பழுது நீக்குதல், புதிய இரும்புக் கயிறு பொருத்துதல், ஷாப்ட் இயந்திரம் பழுது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக நாளை (ஜூன் 16) முதல் ஜூலை 30ம் தேதி வரை 45 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.

Tags : Palani , Annual maintenance work from tomorrow; Ropecar service in Palani suspended for 45 days
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது