×

புனித தோமையர்மலை பகுதியில் சரக்கு வாகனத்தில் குட்கா பாக்கெட்டுகள் கடத்திய ஆந்திர மாநிலத்தவர் கைது: 452.7 கிலோ குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்..!!

சென்னை: புனித தோமையர்மலை பகுதியில் சரக்கு வாகனத்தில் குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த ஆந்திர மாநில நபர் கைது செய்யப்பட்டார். 452.7 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மற்றும் இலகுரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின் ‘‘புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை‘‘ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, S-1 புனித தோமையர்மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் நேற்று காலை, ஆலந்தூர், பால்வெல்ஸ் சாலையில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியே வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட இலகுரக சரக்கு வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்தபோது, வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில் வாகனத்தை சோதனை செய்தபோது, பூண்டு மூட்டைகளின் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய மூட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்த சிவகுமார், வ/44, த/பெ.பெருமாள், பைரட் பள்ளி, பழமநேர் கிராமம், சித்தூர் மாவட்டம், ஆந்திர மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து வாகனத்தில் கடத்தி வந்த 452.7 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், கூலிப், வி1, எம்.டி.எம், ஸ்வாகத் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் Suzuki Super Carry இலகுரக சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி சிவகுமார், சென்னையில் உள்ள கடைகளுக்கு சட்டவிரோதமாக விநியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து மேற்படி குட்கா புகையிலை பாக்கெட்டுகளை கடத்தி வந்தது தெரியவந்தது.  கைது செய்யப்பட்ட எதிரி சிவகுமார் விசாரணைக்குப் பின்னர் நேற்றுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : AP ,holy doomyarmalai ,gudka , St. Thomaiyarmalai, Truck, Gutka, Arrested
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?