புதுச்சேரி: புதுச்சேரி - யாழ்ப்பாணம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு படகு சேவைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் இலங்கையில் உள்ள பலாலியில் இருந்து தமிழகத்தில் உள்ள திருச்சி வரையிலான விமான சேவையை தொடங்குவதற்கும் இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.