×

சின்னதிரை நடிகை தற்கொலை விவகாரம் வழக்கை ரத்து செய்ய கோரி ஹேம்நாத் ஐகோர்ட்டில் மனு: சித்ராவின் தந்தை பதில்தர உத்தரவு

சென்னை: தன்மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தாக்கல் செய்த மனு மீது சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது.  இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தன் மீதான குற்றப்பத்திரிகைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல்துறை விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என சித்ராவின் தந்தை காமராஜ் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  மனு தொடர்பாக சித்ராவின் தந்தை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு  நீதிபதி தள்ளி வைத்தார்.

Tags : Hemnath iCort ,Chitra , Chitra's father files reply to Homnath court
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?