ஸ்ரீநகர்: ஜம்முவில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 100 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வப்போது பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து என்கவுன்டரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இதுவரை 100 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக அரசு உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் 30 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 63 தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். 24 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக்காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு 5 மாதங்கள் 12 நாட்களில் 50 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.