×

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை: ஆவணக் கொலையா?.. என போலீசார் தீவிர விசாரணை..!

தஞ்சை: கும்பகோணம் அருகே சோழபுரத்தில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் சென்னையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணமா செய்து கொண்டனர். திருமணம் முடிந்து சென்னையில் தங்கியிருந்த நிலையில் பிரச்சனை வேண்டாம் என கூறி சரண்யாவின் குடும்பத்தினர் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். இதனை ஏற்று சொந்த ஊர் வந்த தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த சரண்யா, அவரது கணவர் மோகன் ஆகியோர் ஊர் திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதால் சோழபுரம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

2 போரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் தலைமறைவாகி உள்ளார். சரண்யாவுக்கு அவரது சகோதரர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்த நிலையில் காதல் திருமணம் செய்ததால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சரண்யா - மோகன் ஜோடி ஜாதி மறுப்பு திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட சரண்யா, கணவர் மோகனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kumpakonam ,Cholhalapuram , Newlywed couple hacked to death in Cholapuram near Kumbakonam: Document murder?
× RELATED கும்பகோணம் அருகே சோழபுரத்தில் புதுமண...