×

ஆம்னி பஸ் கவிழ்ந்து 5 பேர் பரிதாப பலி: 40 பேர் படுகாயம்

திருமலை: ஒடிசா மாநிலம் சின்னப்பள்ளியில் இருந்து ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் வழியாக விஜயவாடா நோக்கி தனியார் ஆம்னி பஸ் பயணிகளுடன் இன்று காலை வந்தது. எடுகுரல்லப்பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையிலேயே கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஒடிசாவை சேர்ந்த தனேஷ்வர்தலபதி (24), ஜீது (5), சுனேனா (2) உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பத்ராசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Omni bus , Omni bus overturns, 5 killed, 40 injured
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி