×

எல்லையில்லா அறிவை பெறும் ஆண்டாக அமையட்டும்: அன்புமணி வாழ்த்து

சென்னை: புதிய கல்வியாண்டு மாணவர்களுக்கு எல்லையில்லா அறிவை பெறும் ஆண்டாக அமையட்டும் என்று அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், புதிய வகுப்புகளுக்கு மாணவச் செல்வங்கள் திரும்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய 2023வது கல்வியாண்டு சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2019ம் ஆண்டுக்குப் பிறகு இப்போது தான் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கின்றன. இடைப்பட்ட ஆண்டுகளில் கொரோனா பரவலால் மாணவர்கள் இழந்தவை ஏராளம். அவை கடந்த காலங்களாகட்டும். புதிய கல்வியாண்டு கல்வியையும், எல்லையில்லா அறிவையும் பெறும் ஆண்டாக அமையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Anbumani , May it be the year of receiving boundless knowledge: Greetings Anbumani
× RELATED என்எல்சி பிரச்னை, 10.5% இடஒதுக்கீட்டை...