×

ஆர்எஸ்எஸ் கொ.ப.செ.வாக செயல்படும் ஆளுநர்: பாலகிருஷ்ணன் தாக்கு

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூரில் அளித்த பேட்டி: சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ரவி பேசியது ஏற்புடையதல்ல. ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பு செயலாளராக தமிழக கவர்னர் செயல்படுகிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆர்எஸ்எஸ் கோட்பாடுகளை பரப்பலாம். ஆளுநராக இருந்து கொண்டு நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், நாட்டின் வரலாறு தெரியாமலும் ஆளுநர் பேசுவது கண்டிக்கத்தக்கது.

கன்னியாகுமரியில் நடந்த தேரோட்டத்தில் தமிழக அமைச்சர்களை தேரை இழுக்க விடாமல் செய்தது பாஜகவின் சதி செயலாகும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க பாஜக சதி வேலை செய்கிறது. குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அழைத்து  ஒன்று சேர்ந்து ஒருமித்த கருத்து ஏற்படுத்த வரும் 15ம் தேதி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், மம்தா பானர்ஜி தனியாக கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது தவறானது.

மம்தா பானர்ஜி செய்யும் செயல் பாஜகவுக்கு உதவுவதாக அமைகிறது. மோடி என்ற ஒற்றை உருவத்தை வைத்து தான் பாஜக அரசியல் செய்கிறது. அக்கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசல்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெளியில் வரும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

Tags : RSS ,Balakrishnan , Governor acting as RSS CP: Balakrishnan attack
× RELATED ஆர்எஸ்எஸ், சங் பரிவாரால்...