திருமலை: விஜயவாடா ரயில் நிலையத்தில் தாயுடன் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை மர்ம பெண் கடத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவானது. அதை வைத்து தனிப்படையினர் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டத்தில் உள்ள விஜயவாடா ரயில் நிலையத்தில் இரவில் தங்கி தினமும் கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருபவர்கள் மிர்சாவலி. இவரது மனைவி ஹூசைன். தம்பதிக்கு 3 வயதில் ஷபிதா என்ற மகள் உள்ளார். கடந்த 8ம் தேதி ஷபிதா தாயுடன் ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags : Vijayawada train station , Mysterious woman who abducted 3-year-old girl playing with mother at Vijayawada railway station: Private investigation with CCTV footage