×

ஓட்டலுக்கு அழைத்து சென்று சிறுமியின் பலாத்காரம் நேரலையில் ஒளிபரப்பு: மத்திய பிரதேசத்தில் 2 பேர் அட்டூழியம்

குவாலியர்: மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுமியை ஓட்டலுக்கு அழைத்து சென்ற இரண்டு இளைஞர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி, அதனை நேரலையில் ஒளிப்பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இரண்டு நண்பர்கள் கடந்த சில நாட்களுக்கு ஓட்டலுக்கு அழைத்துச் ெசன்றனர்.

அங்கு அந்த சிறுமியை அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதுமட்டுமின்றி தாங்கள் செய்த பாலியல் பலாத்காரத்தை சமூக ஊடகங்கள் வழியாக நேரலையில் சில நண்பர்களுக்கு ஒளிபரப்பினர். இவ்விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்ட இருவரும் தலைமறைவாக இருப்பதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து கோட்வாலி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் குப்தா கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியும், அதேபகுதியை சேர்ந்த இளைஞர்களும் நட்பு முறையில் பழகியுள்ளனர்.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அந்த இரண்டு நண்பர்கள், சிறுமியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதனை அவர்களது நண்பர்கள் சிலருக்கு நேரலையில் ஒளிபரப்பி உள்ளனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை, ஓட்டலில் இருந்து அழைத்து சென்று அவரது வீட்டின்முன் விட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகள் இருவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குபதிந்துள்ளோம். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்’ என்றார்.

Tags : Madhya Pradesh , Take a girl to a hotel and rape her live: 2 people were abused in Madhya Pradesh
× RELATED விபத்தில் லாரி எரிந்து கொண்டிருந்த...