×

மணமேல்குடி அருகே திடீரென்று இடிந்து விழுந்த பழமையான பாலம்

அறந்தாங்கி: மணமேல்குடி அருகே திடீரென்று இடிந்து விழுந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணமேல்குடியை அடுத்த நிலையூர், செல்லப்பன்கோட்டை, பொய்கைவயல், கோபாலபுரம், தர்மராஜன்வயல், குடிக்காடு, பிராமணவயல், தினையாகுடி, கம்பர்கோவில், கூம்பள்ளம், நீர்விளங்குளம், கூத்தனூர், காரக்கோட்டை சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து ஆவுடையார்கோவில், பெருமருதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நிலையூர் அருகே ஓடும் வெள்ளாற்றை கடந்து செல்ல வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெள்ளாற்றில் பாலம் இல்லாததால், பொதுமக்கள் வெள்ளாற்றில் தண்ணீர் வரும் காலங்களில் இந்த வழியே செல்ல முடியாமல் பல கி.மீ துரம் சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது. இந்த நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலையூர் அருகே வெள்ளாற்றின் குறுக்கே பல கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. நிலையூர் பகுதியில் இருந்து ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதிகளுக்கு தடையின்றி செல்ல தமிழ்நாடு அரசு உயர்மட்ட பாலம் அமைத்துக் கொடுத்த போதிலும், நிலையூர்-இடையாத்திமங்கலம் சாலையில் இருந்து வெள்ளாறு உயர்மட்ட பாலத்திற்கு செல்லும் வழியில் இருந்த பழமையான குறைந்த அகலமே உள்ள சிறிய பாலத்தில் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.

வெள்ளாற்றின் குறுக்கே பல கோடி ரூபாய் மதிப்பிலான உயர்மட்டப்பாலம் கட்டப்பட்ட போதிலும், அந்த பாலம் வழியாக நிலையூர் பகுதியில் இருந்து சிறுவரை வழியாக ஆவுடையார்கோவிலுக்கு பேருந்து சேவை தொடங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் நிலையூரில் இருந்து வெள்ளாறு உயர்மட்ட பாலம் வழியாக ஆவுடையார்கோவில் செல்லும் சாலையில் நிலையூர் அருகே இருந்த குறுகலான சிறிய பாலத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. அந்த பாலத்தில் இடிந்த பகுதி போக மீதமுள்ள பகுதியும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால் அந்த பாலம் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வழியாக ஆவுடையார்கோவில், பெருமருதுhர், சிறுவரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் பல கி.மீ துhரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு அப்பகுதி மக்கள், மாணவ, மாணவியர் நலன் கருதி நிலையூரில் பழுதடைந்துள்ள பாலத்திற்கு பதிலாக புதிய பாலத்தை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

Tags : Manamalgudi , The oldest bridge that suddenly collapsed near Manamelkudi
× RELATED மணமேல்குடி, ஆவுடையார்கோவில்...