×

பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க முதல்வர் பாடுபடுகிறார்: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

நாகை: தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க முதல்வர் ெதாடர்ந்து பாடுபட்டு வருகிறார் என்று அமைச்சர் மெய்யாதன் தெரிவித்தார். கலைஞரின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு நாகை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக சிலம்ப விளையாட்டு போட்டி அவுரித்திடலில் நேற்று நடந்தது. நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். அமைச்சர் மெய்யநாதன் போட்டிகளை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:
இங்கு 350 மாணவ, மாணவிகள் 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் சிலம்பமும் ஒன்று. அதை மீட்டு எடுக்கும் வகையில் இன்றைய இளைய சமுதாயம் களத்தில் இறங்கியுள்ளது பெருமையாக உள்ளது. சிலம்ப ஆசான்கள், பேராசான்கள் 100 பேரை தேர்வு செய்து ஒரு ஆசானுக்கு ஒரு லட்சம் வீதம் ரூ.1 கோடி வழங்க முதல்வர் அறிவித்துள்ளார்.

அதே போல் சிலம்ப வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ், 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்க முதல்வர் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். ஒன்றிய அரசின் கோலோ இந்தியா திட்டத்தின் கீழ், சிலம்ப விளையாட்டுகளை சேர்க்கவும் முதல்வர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,Minister ,Meyyanathan , Traditional Sports, Chief Minister, Minister Meyyanathan,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...