×

விருதுநகர் அருகே பயங்கரம்: 2 வாலிபர்கள் வெட்டி கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் தடங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (56). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் 3வது மகன் சந்தனகுமார் (23). இவர் கோவையில் கட்டிட வேலை செய்து வந்தார். அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்லும் சந்தனகுமார், மூன்று நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். ஊருக்கு வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (18) என்பவருடன் சுற்றித்திரிவது வழக்கம்.

ஆர்ஆர்.நகர் அருகே ஆடுகள் காணாமல் போன சம்பவத்தில், அதே ஊரைச் சேர்ந்த பெத்தையான் மகன் மணிகண்டன் என்பவர் சந்தனகுமார் மீது பழி சுமத்தியுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சந்தனகுமார், மணிகண்டன் ஆகிய இருவரும் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த பெத்தையான் மகன் மணிகண்டன் இருவரிடமும் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன்பகை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு கண்மாய்கரை அருகே சந்தனகுமார், மணிகண்டன் ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் வச்சகாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்பகை காரணமாக எனது மகன் சந்தனகுமார் மற்றும் மணிகண்டனை, பெத்தையான் மகன் மணிகண்டன் வெட்டி கொலை செய்திருக்கலாம் என போலீசில் கண்ணன் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெத்தையான் மகன் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Tags : Virudhunagar , Terror near Virudhunagar: 2 youths hacked to death
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...