சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே கேட் அருகே எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 1450 மதுபாட்டில்கள் இருந்தது. பின்னர், ரூ.5 லட்சம் மதிப்புள்ள அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த பிரசாத்(30) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.