சென்னை: அண்ணாநகர் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணனை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. தொழிலதிபர் ராஜேஷை கடத்தி மிரட்டி சொத்துக்களை அபகரித்த புகாரில் முன்னாள் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். தொழிலதிபர் ராஜேஷை கடத்தி சொத்துக்களை அபகரித்த புகாரில் இதுவரை 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.