×

கருணாநிதி பிறந்தநாள் 990 பேருக்கு அரிசி, 990 பேருக்கு அன்னதானம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுதெரு பகுதியில் திமுக பிரமுகர் சாட்சி சண்முகசுந்தரம் தலைமையில் 990 பேருக்கு அரிசி மற்றும் 990 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் ,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு 990 பேருக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் 990அன்னதானம் வழங்கி பேசினர்.இதில் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், அவைத்தலைவர் சந்துரு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ், கிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karunanidhi , Karunanidhi's birthday rice for 990 people and food for 990 people
× RELATED டைமிங் தகராறு மினி பஸ் டிரைவர், கண்டக்டர்கள் 5 பேர் கைது