ஆவடி: ஆவடியில் 3 நாட்கள் நடைபெறும் உணவுத் திருவிழாவை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் துவக்கிவைத்தார்.திருவள்ளூர் மாவட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி உட்பட்ட கனரக வாகன தொழிற்சாலை மைதானத்தில் உணவுத்திருவிழா - 2022 நேற்று நடைபெற்றது. இதனை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கிவைத்தார். இது 3 நாட்கள் நடக்கிறது. இதில் உள்ளூர் உணவகங்கள் முதல், வெளிநாடு உணவகங்கள் வரை, சுமார் 130 உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு திருவிழாவில் ஆவின் நிறுவனம் தயாரித்த பால்கோவா, உலகின் உயரமான பலுடா ஐஸ்க்ரீம் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி ஆணையர் தர்பாகராஜ், டாக்டர் எம்.ஜெகதீஸ் சந்திரபோஸ், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், நகர பொறுப்பாளர் ராஜேந்திரன், பேபி.சேகர், ஜி.நாராயணபிரசாத், பொன்.விஜயன், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.