திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு திரும்பியபோது மலைப்பாதையில் கார் கவிழ்ந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 பக்தர்கள் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், கபிலேஸ்வர நகரை சேர்ந்த தனசேகர் தனது நண்பருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்தார். ஏழுமலையானை தரிசித்துவிட்டு நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.