×

ஐடிஐ, பொறியியல் மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்: வரும் 13ம் தேதி நடைபெறுகிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் அலுவலகம் சார்பில் தொழிற்பயிற்சி முடித்தோருக்கான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடத்தி வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல், அம்பத்தூர் அரசு ஐடிஐ வளாகத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளை சேர்ந்த தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்கள், பாலிடெக்னிக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பிரதம மந்திரியின் தொழிற்பழகுநர் சேர்க்கைக்கான முகாம் வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்க உள்ளன.

எனவே, இம்முகாமில் தகுதியான ஐடிஐ, பாலிடெக்னிக், பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். இதுகுறித்து திருவள்ளூரில் உள்ள உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை, நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற இணையதளம் மற்றும் 9499055663, 9444224363, 9444139373, 9444665884 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Tags : ITI , Apprenticeship Camp for ITI, Engineering Students: Held on the 13th
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...