×

அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு கோயில் நிர்வாகத்திடம் 3 ஐம்பொன் சிலை ஒப்படைப்பு

தஞ்சாவூர்: அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 45 ஆண்டுகளுக்கு பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் மீட்கப்பட்ட 3 ஐம்பொன் சிலைகள் நேற்று அந்தந்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர், நாகை, அரியலூர், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பழமையான கோயிலில் இருந்த திருட்டு போன 10 ஐம்பொன் சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக தஞ்சாவூர் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோயிலுக்கு 3 ஐம்பொன் சிலைகள் கொண்டு வரப்பட்டது. சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த்முரளி தலைமையில் ஐ.ஜி. தினகரன், எஸ்பி. ராஜாராமன், ஏடிஎஸ்பி மலைச்சாமி ஆகியோர் நேற்று கொண்டு வந்தனர். இவை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலையில் சிலைகளை ஒப்படைக்கப்பட்டது.

45 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோயிலுக்கு வந்த நடராஜர் சிலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலைகள் அணிவித்தும், கற்பூர ஆரத்தி வழங்கியும், மங்கள வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போல் அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரம் வன்மீகநாதர் கோயிலிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிவன்பார்வதி ஐம்பொன் சிலை, நாகப்பட்டினம் சாயவனேஸ்வரர் கோயிலிலிருந்து 1965ம் ஆண்டு மாயமான குழந்தை சம்பந்தர் ஐம்பொன் சிலை அந்தந்த கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : Australia, USA , Handing over of 3 iphone statues to the rescue temple administration from USA, Australia
× RELATED ஜனவரி 28ம் தேதி முதல்வர் வெளிநாடு...