×

தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழரிடம் விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி நான்காம் மணல் திட்டு பகுதியில் நேற்று நின்றிருந்த இலங்கை நபரை மரைன் போலீசார் மீட்டு தனுஷ்கோடிக்கு அழைத்து வந்தனர்.விசாரணையில், அவர் இலங்கை திரிகோணமலை மாவட்டம், சிவபுரி பகுதியை சேர்ந்த தினேஷ்காந்தன் (36) என்பதும், படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததும் தெரிய வந்தது. ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், மண்டபம் முகாமில் உள்ள நிலையில், இவரும் விசாரணைக்கு பிறகு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என தெரிகிறது.

Tags : Dhanushkodi , Inquiry into the Sri Lankan Tamils who came to Dhanushkodi
× RELATED கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க...