ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஒவ்வொரு மாதமும் எண்ணப்படுகிறது.அதன்படி, இந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
கோயில் உதவி ஆணையர் கருணாநிதி, பேரூர் உதவி ஆணையர் விமலா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்களில் ரூ.20 லட்சத்து 72 ஆயிரத்து 229 கிடைத்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.