×

ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த பசுமாடு, வீடுகளுக்குள் புகுந்த சாரைபாம்பு, நல்ல பாம்பு ஆகியவற்றை தீயணைப்பு படையினர் நேற்று மீட்டனர். ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் சுமார் 7 அடி ஆழ தண்ணீர் தொட்டி ஒன்றில் பசுமாடு ஒன்று விழுந்தது. இதை மீட்க அப்பகுதியினர் முயற்சித்தனர். ஆனால், மாட்டை வெளியேற்ற முடியாத நிலையில் இதுபற்றி ஆம்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடன் அங்கு சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிறு கட்டி பசுமாட்டை மீட்டனர். இதேபோல் ஆம்பூர் அடுத்த பெரியவரிக்கத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு மற்றும் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பத்தில் ஒரு வீட்டில் புகுந்த சுமார் 6 அடி நீள நாகபாம்பு ஆகியவற்றை தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சென்று மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Tags : Ambur , Rescue of a cow that fell into a water tank near Ambur
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...