×

இரும்பு திரைக்கு மறைவில் இளம்பெண்களின் கருமுட்டை விற்பனை: கட்டுப்பாடற்ற கருமுட்டை தானம் உயிருக்கு ஆபத்து : அப்பாவிகளை வைத்து வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் மருத்துவமனைகள் : டாக்டர் பூபதி ஜான் பேட்டி

சென்னை: திருமண வயதை எட்டாத இளம்பெண்கள், இளம் விதவைகள், வறுமையில் உழலும் பெண்களை உயிராக கருதாமல் பொருளாக கருதி சட்டத்துக்கு புறம்பாக கருமுட்டைகளுக்காக பயன்படுத்தும் மருத்துவ துறையின் இரும்பு திரைக்கு பின்னால் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டி கொண்டுள்ளது மருத்துவமனைகள். இதில், ஆண்டுக்கு பல கோடிகள் புரள்வதாலும் இதுவரை இது குறித்து பெரிய அளவில் புகார்கள் வராததாலும் சமூக விரோதிகள் இளம் பெண்களை, பிராய்லர் கோழிகளை போல கருமுட்டை சுமப்பவர்களாக மாற்றி உள்ள சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.கருமுட்டை விற்பனை தற்போது தமிழகத்தில் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள நிகழ்வு. கோழிப் பண்ணைகளில் பிராய்லர் மற்றும் முட்டையிடும் கோழிகளுக்கு தடை செய்யப்பட்ட தீவனத்துடன் எடை அதிகரிக்க ஹார்மோன் கலக்கப்படுகிறது. இதனால் குறைந்த மாதத்தில் பிராய்லர் கோழிகள் எடை கூடுவது அல்லது அதிக முட்டையிட்டு வியாபாரிக்கு பெருத்த லாபத்தை தருகிறது. கோழிகளுக்கு தடை செய்யப்பட்ட தீவனம் தரக்கூடாது என்ற சட்டமும் உள்ளது.

ஆனால், பெண்மையை தெய்வமாக நினைக்கும் நாட்டில், அவர்களையே கருமுட்டை உற்பத்தி செய்யும் இயந்திரமாக மாற்றி, மருத்துவ துறையின் இரும்பு திரையால் மூடப்பட்டுள்ள பக்கங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. வேலையின்மை, வறுமையை பயன்படுத்தும் மோசடி கும்பலுடன் கை கோர்க்கும் பெரிய பெரிய மருத்துவமனைகள் கருமுட்டைக்காக, சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வருகிறது.
எங்களிடம் வாங்கும் பொருளுக்கு கியாரன்டி என்பதுபோல எங்களிடம் வரும் தம்பதிகளுக்கு குழந்தை நிச்சயம் என்ற விளம்பரம் செய்யாத குறையாக மருத்துவமனைகள் போட்டி போட்டு கொடுக்கும் விளம்பரங்கள் மட்டுமே ஆண்டுக்கு பல கோடி. அதைவிட நூறு மடங்கு சட்டவிரோத கருமுட்டை சந்தை மூலம் அந்த மருத்துவமனைகள் கோடிகளை குவித்துவிடுகின்றன.செயற்கை கருத்தரிப்பு மற்றும் கருமுட்டை தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டத்தில், பல விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய அளவிலும் மாநில அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் இயங்குகின்றன. பதிவு செய்த மருத்துவமனைகள்தான் கருமுட்டைகளை பயன்படுத்த முடியும். இதற்கு கருமுட்டை கொடுப்பவர் முழு ஒப்புதல் தரவேண்டும். அவர் மேஜராகவும் இருக்க வேண்டும். ஆனால் ஈரோட்டில் உள்ள சிறுமிக்கு நடந்துள்ள விதிமீறல்களில் கருமுட்டை விற்பனை குறித்த கண்காணிப்பு முறையாக நடைபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் என்றாலே தனியார் மையங்களுக்கு தான் செல்லவேண்டும் என்ற நிலை இருப்பதால், ரகசியமாக கருமுட்டை விற்பனை நடைபெறுகிறது. மேலும், செயற்கை கருத்தரிப்பில் விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது, சென்னை மற்றும் மதுரையில் 2 செயற்கை கருத்தரிப்பு மையங்களை அரசு தொடங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. அரசு கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தனியார் மையங்களில் நடக்கும் விதிமீறல்கள் குறையும்.யாருக்கு கருமுட்டை தேவைஒரு பெ‌ண்ணு‌க்கு கருமு‌ட்டை‌ உருவா‌க்க‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌னைக‌ள், சினைப்பை முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள், கருமுட்டை உருவாக வாய்ப்பே இல்லாதவர்கள் தான், கருமுட்டை தானமாக பெறமுடியும். இது மட்டுமல்லாமல், ஜீன் குறைபாடு காரணமாகவும் சிலருக்கு குழந்தை பிறக்காது. இவர்கள் தங்களது கருமுட்டையைப் பயன்படுத்தாமல் இன்னொரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானமாகப் பெற்று கருத்தரிக்கலாம்.

இதுகுறித்து, பொதுநல மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பூபதி ஜான் கூறுகையில்: 100 பேர் திருமணம் செய்து கொண்டால், இன்றைய சூழலில் 20 முதல் 25 பேருக்கு குழந்தை பிறக்கும் சூழல் இல்லை. இதனால் குழந்தை வேண்டி தம்பதியினர் மருத்துவர்களை பார்த்து ஆலோசனை பெறுகின்றனர். இதற்கு சிறப்பு சிகிச்சை இல்லாமல் சாதாரண மகப்பேறு மருத்துவர்களை பார்த்தாலேபோதும். அவர்கள் வழங்கும் ஆலோசனைகள், மருந்து, ஊசிகள் மூலமே குழந்தை பெற்றுக் கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளது.டெஸ்ட் டியூப் குழந்தைகள் என்பது விஞ்ஞானத்தின் ஒரு வளர்ச்சியாக நாம் நினைத்தாலும் மருத்துவ துறையில் அதை வணிகத்தின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டனர். தெருவுக்கு தெரு பீடா கடைகள் இருப்பதுபோல அதாவது ஐவிசி சென்டர்கள் வந்துவிட்டது. முன்பு தகுதி வாய்ந்தவர்கள் ஒரு அம்மாவை உருவாக்குகிறோம் என்ற ஆத்ம திருப்தியில் ஐவிசி சிகிச்சை அளித்தனர். ஆனால், அதில் வரக்கூடிய வருமானத்தை பார்த்து, சாதாரண மருத்துவர்களும் ஐவிசி பயிற்சி எடுத்து பணத்தை குவிக்கும் சென்டர்களாக மாற்றிவிட்டனர். தற்போது செயற்கை கருத்தரித்தல் என்பது மருத்துவ சேவையாக இல்லாமல் போட்டி நிலவும் துறையாக மாறிவிட்டது. விளம்பரம், புரோக்கர்கள் என்று சட்டவிரோதமாக பல செயல்கள் நடக்கிறது.

செயற்கை கருத்தரிப்பு எப்படி?ஐவிசி பரிசோதனை கூடத்தில் செய்வது விந்து மற்றும் ெபண்ணின் கருமுட்டையை ஒரு கண்ணாடி பெட்டிக்குள் சேர்த்து வைப்பார்கள். அதற்கென பிரத்யேக கருவிக்குள், குறிப்பிட்ட வெப்பநிலையில் கருவிக்குள் வைத்திருப்பார்கள். அவை ஒன்று சேர்ந்தவுடன் கரு உருவாகும். இந்த கருவானது 2 ஆகவும், 4 ஆகவும், 8 ஆக வளர்ந்து கொண்டே இருக்கும். இந்த கரு பரிசோதனை கூடத்தில் உள்ள கருவியில் கருமுட்டை உற்பத்தியாகி ஆகிக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கரு நன்றாக வளர்ந்த பின் பெண்ணின் கருப்பைக்குள் வைத்து விடுவர்கள். இந்த கருவானது பெண்ணின் கருப்பைக்குள் தங்கும். அதன் பிறகு நச்சுக்ெகாடி, குழந்தை என்று படிப்படியாக வளரத் தொடங்கும் இது தான் டெஸ்ட்டியூப் குழந்தை என்கின்றனர். இந்த முறையிலும் குழந்தை பிறக்கும் என்று 100 % உறுதியாக கூறமுடியாது. சரியாக செய்தாலும் 60 சதவீதம் பெயிலியர் ஆகவும் வாய்ப்பு உள்ளது. ஈரோட்டில் 15, 16 வயதிக்குள் மேல் உள்ள பெண் குழந்தைளை சட்டத்துக்கு எதிராக கருத்தரிக்க செய்து கருமுட்டையை உருவாக்குகின்றனர். இது சட்டப்படி தவறு. அவர்களுடன் உடல் உறவு வைப்பதும், கருமுட்டையை உருவாக்க நினைப்பதும் சட்டப்படி குற்றம். அவர்களை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கலாம். சமூக விரோதிகளை தூண்டும் மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கவும் முடியும். அதுவும் 18 வயது முதல் 20 வயதுடைய பெண்களிடம் எடுக்கும் கருமுட்டைகள் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கும். எனவே சிறு வயதினருடையவரின் கருமுட்டைகள் நன்றாக இருக்கும். வயதானவர்களிடம் கருமுட்டை வளர்ச்சி அடைந்திருக்காது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கருமுட்டைகள் உருவாக வாய்ப்பு இல்லை. அதனால் தான் சிறு வயதுடைய பெண்களிடம் இருந்து கருமுட்டையை எடுத்து அதிக வயதுடையவருக்கு வைக்கும் போது உறுதியாக குழந்தை பிறக்ககூடிய நிலை ஏற்படுகிறது. அதை வைத்து தங்களுடைய மருத்துவமனையை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். அதாவது 45 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் எங்கள் மருத்துவமனைக்கு வந்தால் நிச்சயமாக குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக இதுபோன்று தவறான செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரை பறிக்கும், புற்றுநோய் வரும் கருமுட்டை தானம் கொடுக்கும் பெண் 25 முதல் 30 வயதுக்குள் ஆரோக்கியமானவராகவும் இருக்க வேண்டும். கருமுட்டை உருவாக்க தானம் கொடுக்க வரும் பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை அல்லது ஊசி செலுத்தப்படும். அந்த மருந்தை அந்த பெண் ஏற்கும் அளவுக்கு ஆரோக்கியமாக, மேஜராக இருக்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று கருமுட்டைகள் வரை கருப்பையினுள் வைக்கப்படும். அதற்கு முன்பாக, 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இருக்கும் கருமுட்டையை மைனஸ் 194 சென்டிகிரேடுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனை க்ரையோலாஜிக் என்று சொல்வார்கள். இதனை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாக்கலாம். ஒரு பெண் 4 முதல் 5 முறைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது ஆபத்தானது. ஒரு முறை தானம் செய்வதற்கும் அடுத்த முறை தானம் செய்வதற்கும் இடையில் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது இடைவெளி இருக்க வேண்டும். அடிக்கடி கருமுட்டை தானம் செய்தால் கருப்பைப்பை புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

Tags : Iron Curtain ,Dr. ,Bhupathi John , Sale of young girls' eggs behind the Iron Curtain: Uncontrolled egg donation is life threatening: Hospitals flying the flag in the business of keeping innocents: Interview with Dr. Bhupathi John
× RELATED கண்ணைக் கட்டிக்கொள்ளாதே