×

சிறையில் இருந்து ஜாமினில் விடுதையான ரவுடி: மற்றொரு வழக்கில் கைது செய்ய காத்திருந்த போலீசார்

சேலம்: சேலம் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி தனிப்பட்ட காவல்துறைக்கு தெரியாமல் ரகசிய வழியில் வெளியே அனுப்பிய 2 சிறை வாடன்கள் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கையை சேர்ந்த பிரபல ரவுடி வசந்த் என்பவர் வழிப்பறி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

நேற்று ஜாமினில் வெளிய வர இருந்த நிலையில் அவர் அவர் மீது மற்றோர் வழக்கில் பிடிவாரண்ட் இருப்பதால் சிவகங்கை தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்வதற்காக காத்து இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் சிறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட கேட்ட போது சம்மந்தப்பட்ட ரவுடி முன்பே சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனிப்படை போலீசார் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதை தான் இருக்கிறது இந்த வழியாக வெளியே வரவில்லை என்று கேட்டுள்ளனர். விசாரணையில் சிறை துறை அதிகாரிகள் ரவுடியை வேற ஒரு வழியாக தப்பிக்க வைத்து தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பணியில் இருந்த சிறை வாடன்கள் ரமேஷ், பூபதி ஆகியோர் இடம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு சிறை வாடன்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கப்பட்டு வருகிறது.  


Tags : Rowdy ,Jamin , Rowdy released on bail from jail: Police waiting to make arrest in another case
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது