×

திருச்செந்தூரில் வரும் 12ம்தேதி வைகாசி விசாகத்திருவிழா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வரும் 11ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. 12ம் தேதி வைகாசி விசாகத்தன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 2.30 மணிக்கு தீபாராதனையும், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும் நடைபெறுகிறது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். விழாவில் ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Vaikasi Visakha Festival ,Thiruchendur , Vaikasi Visakha Festival on the 12th in Thiruchendur
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...