×

சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு தொடர்பாக தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு மீண்டும் கடிதம்

சிதம்பரம்: சிதம்பரம் கோவிலில் அறநிலையத்துறை ஆய்வு தொடர்பாக தீட்சிதர்கள் அறநிலையத் துறைக்கு மீண்டும் கடிதம்  அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமான குழு ஆய்வுக்கு வந்தால் அனுமதிப்போம் என தீட்சிதர்கள் கூறியுள்ளனர். சிதம்பரம் கோவிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது என கூறினர். மேலும் தற்போதைய குழு சட்டத்திற்குட்பட்ட குழு அல்ல, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படிந்து ஆய்வுக் குழுவை திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளது.

Tags : Dixit ,Treasury Department ,Chidambaram Temple , Chidambaram Temple, Treasury, Study, Dikshitars, Letter
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...