×

மயிலாப்பூர், கே.கே. நகர், தண்டையார்பேட்டையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: இன்று நடக்கிறது

சென்னை: மயிலாப்பூர்,  கே.கே நகர் மற்றும் தண்டையார்பேட்டை கோட்டங்களில்  இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மயிலாப்பூர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு செயற்பொறியாளர், மயிலாப்பூர் கோட்ட அலுவலகம், 110 கி.வோ, வள்ளுவர் கோட்டம், துணை மின் நிலையம், மெட்ரோ குடிநீர் நிலையம் அருகில், சென்னை-34 என்ற முகவரியில் நடைபெறும். இதேபோல், கே.கே நகர் கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கே.கே நகர் செயற்பொறியாளர் அலுவலகம், 2வது தளம் 110 கி.வோ, கே.கே நகர் துணைமின் நிலைய வளாகம், கே.கே நகர்,  சென்னை-78 என்ற முகவரியில் நடைபெறும். தண்டையார்பேட்டை கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகம், எண். 805,  டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை, சென்னை-21 என்ற முகவரியில் நடைபெறும். பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ எனக்கூறப்பட்டுள்ளது.


Tags : Mylapore ,K.K. Nagar ,Thandayarpettai , Mylapore, K.K. Nagar, Thandayarpettai Electricity Consumer Complaint Meeting: Going on today
× RELATED ரூ.1.5 கோடி வழிப்பறி: 9 பேர் கைது