×

பிரதிஷ்டை தின பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை (8ம் தேதி)மாலை திறக்கப்படுகிறது. பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவ்வருட பிரதிஷ்டை தினம் வரும் 9ம் தேதி ஆகும். இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
9ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு  நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படும். 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.

Tags : Dedication Day ,Sabarimala Temple Walk Opening , Dedication Day Pooja Sabarimala Temple Walk Opening Tomorrow
× RELATED பாலக்காடு காடாம்கோட்டில் அம்மன்...