×

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: முருகனுக்கு பரோல் நிராகரிக்கப்பட்ட நிலையில் வழக்கை வாபஸ் பெற்றார் நளினி!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்கைதி முருகனுக்கு பரோல் வழங்கக் கோரி அவரது மனைவி நளினி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டது. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியான நளினிக்கு பரோல் வழங்கியதையடுத்து தாய் பத்மாவுடன் தங்கியுள்ளார். தற்போது  சிறையில் உள்ள முருகனுக்கு பரோல் வழங்க கோாி அவரது மனைவி நளினி தமிழக அரசிற்கு விண்ணப்பித்து இருந்தாா். இந்த விண்ணப்பம் பரீசிலிக்கப்படவில்லை எனக்கூறி மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு 6 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என சென்னை கோா்ட்டில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அம்மனுவில் 31 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தங்களை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் விடுதலை தீர்மானத்தின்படி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை ஒரு பரோல் கூட வழங்காததால், மருத்துவ காரணங்களுக்காக கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கக் கோரி மே 26ஆம் தேதி தானும், மே 21ஆம் தேதி தனது தாய் பத்மாவும் சிறைத்துறையிடம் மனு அளித்ததாகவும், அவை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனவும் நளினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் முருகனை 6 நாட்கள் பரோலில் செல்ல அனுமதிக்கும்படி தமிழக அரசிற்கு சிறை துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவானது வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிறையில் இருந்த போது சிறை விதிகளை மீறியதாகவும், தடை செய்யப்பட்ட பொருள் அவரின் அறையில் கண்டுபிடிக்கபட்டதாகவும் முருகன் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளது. “அதில் ஒரு வழக்கில் மட்டும் முருகன் விடுதலை செய்யபட்டுள்ளார்.

மற்றோரு வழங்கு நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், அதை எதிர்த்து சிறைத்துறை டிஐஜி-யிடம் மேல் முறையீடு செய்யலாம் என கடந்த மாதம் 28 ஆம் தேதி தெரிவிக்கபட்டாதாக சிறைத்துறை தரப்பில்  தெரிவித்தார். இதையடுத்து, சிறைத்துறை டிஐஜி-யிடம் மேல் முறையீடு செய்யும்படி நீதிபதிகள் அறிவுறுத்தியதை அடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக நளினி தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Rajiv Gandhi ,Murugan ,Nalini , Rajiv Gandhi, asesinato, Murugan, libertad condicional, retiro
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...