×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு 2 வீட்டின் கதவை உடைத்து 27 பவுன் நகை, ₹60 ஆயிரம் கொள்ளை

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 வீட்டின் கதவை உடைத்து 27 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தை சேர்ந்த பிரசன்னா மனைவி இந்துமதி (34). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரசன்னாவை பிரிந்து திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பையூரில் உள்ள தந்தை கிருபாநிதி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்வரி(12), சன்மதி (10) என்கின்ற  இரண்டு மகள்கள் உள்ளனர்.

தந்தை கிருபாநிதிக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் முன்பக்க கதவு உடைந்து இருப்பதாக  கொடுத்த தகவலின்படி வந்து பார்த்தபோது, மர்ம நபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை 25 பவுன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இந்துமதி திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். பின்பு மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் விழுப்புரம் தடயவியல் நிபுணர் சரவணன் வந்து தடயங்களை  சேகரித்தனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் மனைவி ராகப்பிரியா (32). இவர் காந்தி குப்பம் கிராமத்தில் நடந்த திருவிழாவை பார்த்துவிட்டு இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒரு பவுன் செயின், ஒரு பவுன் கம்மல் மற்றும் 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvennallur , Thiruvennallur: The incident of breaking the door of 2 houses near Thiruvennallur and looting 27 pounds of jewelery and Rs 60,000 has caused a stir.
× RELATED திருவெண்ணெய்நல்லூர் அருகே பங்குனி...