×

உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை தொற்று : ஒரே வாரத்தில் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரிப்பு!!

ஜெனீவா : உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.சின்னம்மை போல குரங்கு அம்மை வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பொதுவாக கோடை காலங்களில் பரவும் நோய் தொற்றாகும். ஆனால், தற்போது குரங்கு அம்மை முதல் முறையாக ஆப்ரிக்க நாடுகளைத் தாண்டி பல்வேறு நாடுகளுக்கு பரவத் தொடங்கி இருக்கிறது. இங்கிலாந்தில் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டுமின்றி ஸ்பெயின், போர்ச்சுகல், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவிலும் பரவி உள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் 27 நாடுகளில் சுமார் 800 பேருக்கு குரங்கு அம்மை தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3 மடங்காக உயர்ந்துள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை பரவுகிற அபாயத்தை தொற்று நோய் நிபுணர்கள் மதிப்பிட வேண்டும். வைரஸ் மரபணுவை ஆய்வுசெய்து, வாய்ப்பு உள்ள பிறழ்வுகளைக் கண்காணிப்பதற்கு அதை வரிசைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

* தடுப்பூசி இல்லை
பொதுவாக ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படும் குரங்கு அம்மை, தற்போது உலகம் முழுவதும் பரவக் காரணம், அது உருவமாறி புதிய வகை வைரஸ் தோன்றி இருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த வைரசுக்கு என தனியாக தடுப்பூசி எதுவும் இல்லை. பெரியம்மைக்கான தடுப்பூசியே குரங்கு அம்மைக்கு எதிராக 85 சதவீதம் பாதுகாப்பு தருவதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Tags : Monkey pox, epidemic, World Health Organization, study
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை