சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், 2வது நிலையில் உள்ள 1வது அலகில் கொதிகலன் குழாயில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2வது நிலையில் உள்ள 2வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.