×

திருமணம் என்றாலே பயம்: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்

சென்னை: கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன், இதற்கு முன்பு லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்டை காதலித்தார். பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2019ம் ஆண்டு அவர்கள் பிரிந்தனர். இதையடுத்து அசாம் மாநிலம் கவுஹாத்தியை சேர்ந்த டூடூல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடன் ஸ்ருதிஹாசனுக்கு காதல் மலர்ந்தது. தற்போது அவர்கள் மும்பையிலுள்ள ஸ்ருதி
ஹாசன் வீட்டில் இணைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன் தனது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இயங்குவார். நாள்தோறும் தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவார். அப்போது எதுபற்றியும் கவலைப்படாமல் வெளிப்படையாக பேசுவார். அதுபோல், சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில், ‘காதலருடன் லிவிங் டூகெதராக வாழ்ந்து வரும் நீங்கள் ஏன் அவரை திருமணம் செய்யவில்லை?’ என்று ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், ‘எனக்கு திருமணத்தின் மீது பயமாக இருக்கிறது. அதனால்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. என் அம்மா சரிகாவுடைய திருமண வாழ்க்கை தோல்வி அடைந்ததால் நான் அப்படி யோசிக்கவில்லை. திருமணம் என்ற வார்த்தையில் எனக்கு பெரிய நம்பிக்கை இல்லை. அதுபற்றிய பயம் மட்டுமே இருக்கிறது. அதனால்தான் திருமண பந்தம் பற்றி நிறைய யோசிக்கிறேன். சாந்தனு ஹசாரிகா என் வாழ்க்கையில் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எங்களுக்குள் பல விஷயங்கள் பொருந்தி இருக்கிறது. இப்போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் ேபால் உணர்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவரது பதில் வைரலானது.

Tags : Sruthihasan , Fear means marriage: says Sruthihasan
× RELATED ‘கமல், சரிகா பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே’: சொல்கிறார் ஸ்ருதிஹாசன்