×

பிரேசிலில் கனமழை: பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பிரசிலியா: பிரேசிலில் கனமழை பெய்து வரும் நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தொடர் கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

பிரேசிலில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய இடங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. வடகிழக்கே அமைந்துள்ள பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப்-ல் பெய்து வரும் கனமழையால் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பெர்னாம்புகோவில் 34 மாநகராட்சி பகுதிகளுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு 9,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக கவர்னர் பவுலோ கமரா தெரிவித்துள்ளார். மேலும் கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Tags : Brazil , Heavy rains in Brazil: Death toll rises to 128
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...