×

மது அருந்த பணம் கேட்டு தகராறு தம்பியை அடித்து கொன்ற அக்கா

சென்னை: சோழவரம் அருகே மாவுத்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (37), கூலி தொழிலாளி. இவரது அக்கா தனலட்சுமி (42). இவருக்கு திருமணமாகி கணவர் ரவி (51) மற்றும் குடும்பத்தினருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். பூபாலனுக்கு திருமணமாகாததால் அக்கா தனலட்சுமி வீட்டிலேயே வசித்து வந்தார்.கடந்த சில மாதங்களாக பூபாலன் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும், மது பழக்கத்திற்கு அடிமையான இவர், குடிப்பதற்கு பணம் கேட்டு, அடிக்கடி தனது அக்காவை தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த பூபாலன், மேலும் குடிப்பதற்கு அக்காவிடம் பணம் கேட்டுள்ளார். இதனால், அவர்களிடையே கடும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தனலட்சுமி, தனது கணவர் ரவியுடன் சேர்ந்து பூபாலனை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  இருவரும் அந்த அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றனர்.

நேற்று காலை இவர்கள் வீடு திரும்பியபோது, பூபாலன் இறந்தது தெரியவந்தது. இதனால், பயந்துபோன அவர்கள், பூபாலன் மீது இருந்த ரத்த காயங்களை மறைத்து, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்ததாக தங்கள் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி நம்ப வைத்தனர். பின்னர், அவரது இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், அவர்களுடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து  சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு   விரைந்து வந்த போலீசார், பூபாலனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணையில், குடிப்பதற்கு பணம் கேட்ட தம்பியை தனலட்சுமி, அவரது கணவர் ரவி ஆகிய இருவரும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனலட்சுமி, ரவியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Akka , The sister who beat her brother to death after asking for money to drink alcohol
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!