×

நவீன தமிழகத்தின் சிற்பி கலைஞர்: துரை வைகோ புகழாராம்

சென்னை: கலைஞரின் 99வது  பிறந்தாளையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்  நிறுவப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவ சிலை மற்றும்  அவரது திருவுருவ படத்திற்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ  நிருபர்களிடம் கூறுகையில், ‘சமூக  நீதி, பெண்ணுரிமை போன்றவற்றுக்கு திட்டங்களை தந்தவர் கலைஞர்.  சிறுபான்மையினரின்  பாதுகாப்புக்காக பல தீர்மானங்களை கொண்டு வந்தவர். நவீன  தமிழகத்தின் சிற்பியான கலைஞர்,  வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளார்’ என்றார்.

கலைஞருக்கு வைகோ மரியாதை: கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவ படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மலர்தூவி வீர வணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகே.விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Durai Vaiko , Modern Tamil, Sculptor, Durai Vaiko,
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...