×

சிங்கப்பூர் விமானத்தில் இயந்திர கோளாறு 104 பேர் தப்பினர்

சென்னை: சிங்கப்பூர் செல்லும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. 104 பேர் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு புறப்பட தயாரானது. விமானத்தில் 98 பயணிகள் 6, விமான சிப்பந்திகள் உட்பட 104 பேர் இருந்தனர்.

விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கிய சிறிதுநேரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். கோளாறு சரியான பிறகு விமானம் நேற்று பகல் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது.  இந்த சம்பவத்தில் 104 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags : Singapore , Singapore Airlines, engine malfunction,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...