சென்னை: அண்ணாவுடன் இணைந்து இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். கருணாநிதியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும், அவரது பிறந்த நாள் விழா ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் கொண்டாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.