சென்னை: இந்திய விடுதலை போராளி அஞ்சலை பொன்னுசாமி (102) மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 1943ம் ஆண்டு 2ம் உலக போரின் போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து இந்திய விடுதலைக்காக போராடினார். மலேசியாவின் செந்துல் நகரில் நேற்று முன்தினம் வீரமங்கை அஞ்சலை பொன்னுசாமி காலமானார்.