திருவண்ணாமலை : ஆரணியில் 12-ம் வகுப்பு மாணவன் திருமுருகன்(17) தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்தாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 24-ம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார்.