தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் செக்போஸ்ட் ஓரியூர் செல்லும் வழியல் வாகனஓட்டிகளுக்கு ஏதுவாக வழிகாட்டி பலகை உள்ளது. பெரிதாக உள்ள இப்பலகையின் போல்ட் ஒன்று கழன்று தகரம் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காற்றிற்கு ஆடிக்கொண்டு உள்ளது.
இதனால் அவ்வழியே வாகனங்களில் செல்வோர் ஒருவித அச்சத்துடனே அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து ஏற்படும் முன் வழிகாட்டு பலகையை சரிசெய்ய வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.