×

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடவடிக்கை: திரைபட நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தின் புகார்

திருவனந்தபுரம்: நடிகை ஒருவாரை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் முன்ஜாமீன் பெற்றுள்ள மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான  விஜய் பாபு இன்று காலை துபாயில் இருந்து கேரளா திரும்பி இருக்கிறார். விஜய் பாபு மீது மலையாள திரைபட நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தின் புகார் அளித்தார். அதில் திரைபட வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை விஜய் பாபு பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக தெரிவித்திருந்தார். போலீசார் கைது செய்வதற்க்கு முன்பாக விஜய் பாபு துபாய் தப்பி சென்றார். அவரை பிடிக்க சர்வதேச போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விஜய் பாபு முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.

புகார் அளித்த நடிகையின் சம்மதனத்துடனேயே உடல்நிதியான உறவை ஏற்படுத்தி கொண்டதாக நடிகர் விஜய் பாபு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாக்குமூலம் அளித்தார். அவருக்கு நேற்று நிபந்தனை உடன் முன் ஜாமீனை கொச்சி நீதிமன்றம் வழங்கி உள்ளது. இதை தொடர்ந்து விஜய் பாபு இன்று காலை துபாயில் இருந்து விமானம் மூலம் கொச்சிக்கு வந்து சேர்த்தார். இவர் சினிமா வாய்ப்பு தேடி தம்மை அணுகிய ஏராளமான இளம் பெண்களை தயாரிப்பாளர்களுக்கு இரையாக்கி தனக்கான வாய்ப்புகளை பெற்றார் என பிரதான குற்றசாட்டு விசாரிக்க பட்டு வருகின்றது.


Tags : Vijay Babu ,Kochi police station , Action against Malayalam actor and producer Vijay Babu: A film actress has lodged a complaint with the Kochi Police
× RELATED அஞ்சலி நாயர் நடிக்கும் ஒய்ஃப்