குமரி : கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு, பட்டணங்கால் பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று முதல் 2023 பிப்.2ம் தேதி வரை தினசரி 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடப்பட்டுள்ளது.