×

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ராஜேந்திரன் கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ராஜேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் ராஜேந்திரன் நேற்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rajendran ,Jayalalithah Council of Thiruvallur Eastern District ,OPS ,EPS , Tiruvallur East District Jayalalithaa Assembly Joint Secretary Rajendran fired from party: OBS, EPS announcement
× RELATED சென்னை அருகே சித்த மருத்துவமனையில்...