×

காஷ்மீரின் அவந்திப்போரா பகுதியில் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!!

ஸ்ரீநகர்:  ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் அவந்திப்போராவில் உள்ள ராஜ்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதனை தொடர்ந்து வீரர்கள் தந்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இருந்து 2 ஏகே ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் புல்வாமாவில் உள்ள டிரால் நகரில் வசித்த  ஷாஹித் ராதர் மற்றும் ஷோபியான் மாவட்டத்தில் வசித்த உமர் யூசுப். என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய்குமார் கூறுகையில், ‘‘அரிபால் பகுதியைச் சேர்ந்த ஷகீலா என்ற பெண் மற்றும் லுர்காம் பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர் ஜாவித் அகமது ஆகியோரைக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஷாஹித் தொடர்புடையவர் ஆவர்,என்றார்.


Tags : Avantibora ,Kashmir , Kashmir, Avantibora, extremists, security forces
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...