×

உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த தமிழக பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: ஊடகத்துறையில் 19 ஆண்டுகாலம் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கிரானிக்கல் மற்றும் தி இந்து நாளிதழ்களில் பணியாற்றிய கார்த்திக் மாதவன் நேற்று முன்தினம் இரவு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். கார்த்திக் மாதவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் சிறப்பு நேர்வாக, கார்த்திக் மாதவன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Uttarakhand ,Chief Minister ,MK Stalin , 5 lakh to the families of Tamil Nadu journalists killed in Uttarakhand accident: Chief Minister MK Stalin's order
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...